வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்

பாடியவர் : ஜெயச்சந்திரன், S ஜானகி
பாடல் : தாலாட்டுதே வானம்
படம் : கடல் மீன்கள்
இசை : இளைய ராஜா


தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

அலை மீதில் ஆடும் உள்ளம் எங்கும் ஒரே தாகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்ரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

இரு கண்கள் மோதி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக